அந்தியூரில் போலீஸ்காரர்-மீன் வியாபாரி கைகலப்பு: கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு

அந்தியூரில் போலீஸ்காரர்-மீன் வியாபாரி கைகலப்பு: கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு
X

கைகலப்பு (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீஸ்காரர் - மீன் வியாபாரி இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூரில் போலீஸ்காரர் - மீன் வியாபாரி இடையே கைகலப்பு ஏற்பட்டு கற்களால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்திபாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 37). மீன் வியாபாரியாக இவர் தவுட்டுப்பாளையத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். கடம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சதீஸ்குமார் (35). இவருக்கும் பூபதிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சதீஸ்குமார் பூபதியின் கடை அருகே நின்றுகொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், பூபதியும், சதீஸ்குமாரும் மாறி, மாறி அந்தியூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Similar Posts
ஈரோடு: அத்தாணி பவானி ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
அந்தியூரில் போலீஸ்காரர்-மீன் வியாபாரி கைகலப்பு: கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு
தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் விற்பனை திருவிழா
ஈரோடு மாவட்டத்தில் வண்டல் மண், களி மண் இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு: வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி; அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம்: வரும் 24ம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பவானி அருகே ஜம்பையில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐஐடி-ஜேஇஇ முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா!..
ஈரோடு : பள்ளி மாணவிகளுக்கான தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
மளிகை கடைக்காரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்த உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி