ப.வேலூரில் எலக்ட்ரிக் கடையில் கொள்ளை

ப.வேலூரில் எலக்ட்ரிக் கடையில் கொள்ளை
X
கடை ஷட்டர் உடைத்து திருட்டு நடத்திய மர்ம நபர்கள்

எலக்ட்ரிக் கடையில் ரூ.65,000 திருட்டு

ப.வேலூர்: கந்தம்பாளையம் அருகே உள்ள உலகப்பாளையம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான பரமசிவம் என்பவர் அதே பகுதியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று காலையில் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடைக்குள் நுழைந்து பார்த்தபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருந்ததுடன், அதில் வைக்கப்பட்டிருந்த 65,000 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இந்தத் திருட்டை யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து பரமசிவம் உடனடியாக நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடர்களைக் கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிகிறது.

Tags

Next Story